×

கட்டுமான பணிகள் நடைபெறும் வீட்டில் வெடிகுண்டுகள், கத்தி உட்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

*ஆந்திராவில் தேர்தலை சீர்குலைக்க திட்டமா?

திருமலை : ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் வீட்டில் வெடிகுண்டுகள், கத்தி பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலை சீர்குலைக்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மச்செர்லா சட்டப்பேரவை தொகுதியில் உள்ள துர்கி மண்டலம் ஜங்கமேஸ்வரபாடு கிராமத்தில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

உடனடியாக 17 நாட்டு வெடிகுண்டுகள், 3 கத்தி, 9 கோடாரிகள் மற்றும் ஏராளமான இரும்பு ராடுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த ஆயுதங்களை யார் இங்கு மறைத்து வைத்தனர் என வீட்டின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆந்திராவில் 13ம் தேதி சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தேர்தலை சீர்குலைக்கும் விதமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டுமான பணிகள் நடைபெறும் வீட்டில் வெடிகுண்டுகள், கத்தி உட்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Balnadu district ,Andhra State ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...